10:10 PM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 3

மரணம் நிச்சயம். இதை மறுதலிக்க ரணம் அதிகமாகும்.
-குரு.


கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம். பணிவு அமைதியில் மட்டுமே வரும். அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்.
-குரு.


நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் ஆசைப்படும் விஷயங்களெல்லாம் சோதனை முயற்சியாகத்தான் இருக்கின்றன.
-குரு.


மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை.மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
-குரு.


எப்போது ஒரு விஷயத்தை மற்றவருக்காக நம்முள் திணித்துக் கொள்கிறோமோ அது நல்லதா கெட்டதா என்கிற பார்வையெல்லாம் இனி வரவே வராது.
-குரு.


தனிமையில் இருக்கத் தெரிவது மிகப்பெரிய வரம்.
-குரு.


குரு என்பவர் ஒவ்வொரு சீடனுக்கும் வழங்குகின்ற முதல் விஷயம் அன்புதான்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது அன்புதான்.
-குரு.


செயலில் கர்வம் ஏற்படுகிறபோதுதான், இதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், தடுமாற்றமும் கோபமும் ஏற்படுகின்றன.
-குரு.


காமம் என்பது மிகப்பெரிய தபஸ்விகளையும் கவிழ்த்துவிடும் வல்லமையுடையது.
-பட்டாபிஷேகம்.


நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.
-உத்தமன்.


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 2

3 comments:

உங்களில் ஒருவன் said...

the gift of lonelyness is well portrayed by this great man...these words have a power of messmerism, and im one got mesmerised...thanks for d post

Unknown said...

Hi,

Do you have the likes or Bala's novel on e format? Can you please share it?

Thanks Sukumar

Unknown said...

எழுத்து சித்தர் பாலகுமாரன்..