5:39 AM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 6

மரணம் பயம்.தனிமை தரும் பயம்.தனிமை என்பது மரண பயம்.
-இனிது இனிது காதல் இனிது - 1.


திருமணம் என்பது நம்பிக்கை.பரஸ்பர நம்பிக்கை.அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல்,ஆரவாரமற்ற அன்பு முக்கியம்.நேசம் உண்மையெனில் ஆடாது, அதிராது, ஆவேசப்படாது.
-இனிது இனிது காதல் இனிது - 1.


மனிதன் உடலால் ஆனவன்.மனசால் வாழ்பவன்.இவை இரண்டும் பிரிக்க முடியாதவை.புறக்கணிக்க முடியாதவை. புறக்கணிக்க பிரிக்க விபரீதம் நிகழும்.
-இனிது இனிது காதல் இனிது - 1.


ஏன் மிருகம் என்று மனிதனின் சில உணர்வுகளுக்கு பெயர் தரப்படுகிறது. மிருகமாகுதல் மட்டம் என்கிற விதமாய் பேசப்படுகிறது. ஆசைப்பட்ட பொருளை அடைவதுதான் மிருகத்தின் நோக்கமே ஒழிய, செய்முறைகள் பற்றி அதற்க்கு யோசனையே இல்லை. எதிர் கருத்து அறயும் சிந்தனை இல்லை.


தன்மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு பிறர் மீதும் நம்பிக்கை இல்லை. நீ காதலிக்கப்பட வேண்டுமெனில் காதலிக்க வேண்டும். காதல் என்ன என்பது அறிய வேண்டும். காதல் என்பது மதித்தல், விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம், எந்த எதிர்பார்ப்புமின்றி தான் விரும்பிய வண்ணமே தன் சந்தொஷத்திர்கென்றே பிறர் வளைவர்கள் என்று எதிர்பார்ப்பதில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏமாற்றம் சினம் தரும், சினம் வஞ்சனை உருவாக்கும், வஞ்சனை பொய் சொல்லும், வன்முறை காட்டும், வன்முறை வன்முறையால் சந்திக்கப்படும். பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்.


தன்னை அகௌவ்ரவப்படுத்திக்கொள்வது காதலல்ல. தன்னைத்தானே ஹிம்சித்துக்கொள்வது நேசமல்ல.
-இனிது இனிது காதல் இனிது -2.


தொடல் ஒரு பாஷை. தொடல் ஒரு மொழி.மிக அற்புதமான மொழி. தொடவும் தொடலைப் புரிந்து கொள்ளவும் சற்று நிதானம் தேவை. நிதானம் இல்லாமல் தொடும்போதுதான் பிரச்சினை வந்துவிடுகிறது.
-பாலகுமாரன் பதில்கள், ராஜ கோபுரம்.


கர்வமற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.அஹங்காரப்படுவதால் மற்றவிஷயங்களைப் பார்ப்பது,மற்ற மனிதர்களை அறிவது குறை பாடாய்ப் போய்விடும்.அறியவேண்டியதை அறியாமல் தவறாய்ப் புரிந்து கொள்ள நேரிடும்.
-கடலோரக் குருவிகள்.


இன்னொரு விஷயம் முக்கியம்,கர்வமற்று இருத்தலை போலியாக செய்துவிடுதல் ஆகாது. இதைவிட கர்வப்பட்டு கிடப்பது உத்தமம்.
-கடலோரக் குருவிகள்.


தன் முயற்சிகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற, தன் நெஞ்சின் அடி ஆழத்தில் இருக்கின்ற, ஒரு மகோன்னத சக்தியை உணர்ந்து நிற்றலே கடவுள் நம்பிக்கை.
-கடலோரக் குருவிகள்.


வாழ்க்கை என்பது எளிதே அல்ல. அது நமது கற்பனைகளுக்கும். கணக்குகளுக்கும் அடங்காது. மிக நுண்ணிய சிக்கல்கள் கொண்டது. மேலோட்டமாய் நுனிப்புல் மேய்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாய் சரித்திரமில்லை. கற்பனையில் வாழ்ந்து தான் கற்ப்பனை செய்து கொண்டதே உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிற வாலிபர்களும். யுவதிகளும் அவஸ்தைப்படாமல் மீண்டதில்லை.
-மனசே மனசே கதவைத்திற.


இந்த உலகம் தந்திரமுள்ள உலகம். இதில் நல்லது கெட்டது, சரி தவறு என்று எதுவுமில்லை. தந்திரத்தோடு இருப்பது சில சமயம் வெற்றியிலும் கூட முடயும். ஒரு விஷயத்தின் முடிவு தந்திரத்தில் இல்லை. அது இறைவன் கையில் இருக்கிறது. நீ எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே இரு. எல்லோரும் மற்றவர் விருப்பத்தில் இருக்கிறார்கள். நீ என்ன படிக்க வேண்டும் என்னவாக மாறவேண்டும் என்று உன்னை கேட்டுக்கொள்.
-மனசே மனசே கதவைத்திற.


மனிதனுக்கு ஞாபக சக்தி இருக்கிறது என்பது பொய். முழுமையாய் ஒரு விஷயத்தை மனிதன் ஞாபகப்படுத்திக் கொள்வதே இல்லை. ஒரு விஷயத்தினால் ஏற்பட்ட தகிப்பை உணர்வுகளை நெஞ்சில் பதித்துக் கொள்வதே இல்லை. மறதி அதிகமிருக்கிற ஒரு பிராணியாகத்தான் மனிதன் உலா வருகிறான். தன் பாதிப்பை, துக்கத்தை எளிதில் மறந்துவிட்டு மறுபடியும் அதே விஷயத்தில் ஈடுபடுகிறான்.
-மனசே மனசே கதவைத்திற.


நம்ம மனசுதான் கோட்டை. நம்ம புத்திதான் காவல்.நம்ம தெளிவுதான் வெளிச்சம். நல்லா இருக்கணும்னு உண்மையா ஆசைப்படறவன் தப்பு பண்ணமாட்டான்.
-ராஜாமணி வத்சலாவிடம்,வில்வ மரம்.


கற்பனையில் இறங்குவது சுகம்தான். தானே தன் தத்துவங்களை அடுக்கிக் கொண்டு போவது இயல்புதான். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு இளைஞனும் யுவதியும் என்ன செய்ய வேண்டும்?
சட்டென்று ஒரு கட்டத்தில் தன் கற்பனைகளை கணக்குகளை நிறுத்தி தான் யோசிப்பது சரியா என்று கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நீ சரியாகச் சிந்திக்கிராய இல்லை உன் விருப்பத்திற்கேற்ப உன் யோசனைகளை வளர்க்கிறாயா. இதை எதிர்பதமாக யோசித்துபார். இந்த பெண்ணை என்னவென்று தெரியாமல் எப்படிப்பட்டவள் என்று தெரியாமல் இவள் வீட்டு பின்புலம் தெரியாமல் நாம் மனம் பரி கொடுத்தால் என்ன ஆவது. எனக்கு இப்போது யார் முக்கியம் இந்த பெண்ணா அல்லது என்னை இதுவரை போற்றி வளர்த்த வீடா என்று யோசிக்க வேண்டும்.
எவன் இவ்வாறு சிந்திப்பை திசை மாற்றுகிறானோ, எதிர்பக்கமும் போய் யோசிக்கிறானோ முழுமையாய் சிந்திக்கிறானோ, அவனுக்கு வெற்றி வாய்ப்பு அருகில் இருக்கிறது.
-மனசே மனசே கதவைத்திற.


தற்கொலை கோழைத்தனம். வாழ்தல் விவேகம். காதல் பொருட்டு தன்னை மாய்த்துக்கொள்ள நினைப்பவன் சுயநலம். எனக்கு எத்தனை துக்கம் பார் என்று காட்டுகிற தான் தோன்றி அலட்டல். பழி வாங்கும் ஊமைக் குசும்பு. மரணமும் அவனுக்கு விடுதலை தராது. காதலில் ஜெயிப்பது என்ன என்று புரிகிறதா? யோசியுங்கள் புர்யும். வயசு விவேகம் தரும். தரவேண்டும்.
-இனிது இனிது காதல் இனிது.


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 4

1 comments:

Jayakanthan R. said...

Thank you for ur comment Mrs.Dheepa Ranganathan and everything will be fine...God bless you...

with regards
Jaikanth R.